பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளவர் ரஜினிகாந்த். இவருடைய படம் வெளிவந்தாலே திருவிழாக் கோலம்தான். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் விஷயம் அது. இப்போது ஒன்றிரண்டு வயது ஆகும் குழந்தைகள் கூட ரஜினிகாந்த் படத்தைப் பார்த்தாலே நடனம் ஆட ஆரம்பித்து விடுகின்றன. அப்படி ஒரு மாயத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த்.
அவரைப் பற்றியும், அவருடைய ரசிகர்களைப் பற்றியும் தயாரிக்கப்பட்டுள்ள டாகுமென்டரி படம் ஒன்று வெனிஸ்-ல் நடைபெற உள்ள 72வது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. ரிங்கு கால்சி என்பவர் தன்னுடைய நண்பர் ஜோயோஜீத் பால் என்பவருடன் இணைந்து இந்த டாகுமென்டரியை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் மிகப் பெரிய கட்-அவுட்டுகள், அதற்கு நடக்கும் பாலாபிஷேகம், ஊர்வலங்கள், ரஜினிகாந்த் ரசிகர்கள் நடத்தும் மற்ற சமூக நல உதவிகள் உட்பல பல விஷயங்களை இணைத்திருக்கிறார்களாம்.
இந்த டாகுமென்டரியை உருவாக்குவதற்காக தான் வேலை பார்த்த தொலைக்காட்சி நிறுவனப் பணியை ராஜினாமா செய்து விட்டு வந்திருக்கிறார் ரிங்கு. இந்த டாகுமென்டரியை கடந்த நான்கு வருடங்களாக உருவாக்கி வருகிறார்களாம். மிகப் பெரிய விருதுகளை இதுவரை வாங்காத ரஜினிகாந்துக்கு அவருடைய ரசிகர்களே பெரிய விருதுகள் என்பது சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் ஒலி,ஒளிக்கப் போகிறது.