டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்நாட்டு ரசிகர்கள் எல்லாம் நடிகர் அர்ஜுனை தமிழ் நடிகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, கர்நாடகாவைப் பொருத்தவரை இன்னும் அவர் கன்னடப்பட ஹீரோதான். காரணம்... அவ்வப்போது கன்னடப் படங்களில் நடித்து தன்னை கன்னடப்பட ஹீரோவாகவே அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக்கொண்டு வருகிறார். நேரடி கன்னடப்படங்களில் நடிப்பது மட்டுமல்ல, தான் நடிக்கும் தமிழ்ப் படங்களையும் கூட கன்னடத்தில் வெளியிடும் வகையில் செய்துவிடுகிறார்.
சசிதரூர் மனைவியின் மர்ம மரணத்தைப் பற்றிய கதை அம்சம் கொண்ட ஒரு மெல்லிய கோடு படம் தமிழில் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் இந்தப்படம் கன்னடத்திலேயே எடுக்கப்படுகிறது. கன்னடத்திலும் இப்படம் வெளியிடப்பட உள்ளது. அதனாலேயே இப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பை பெங்களூருவில் நடத்தி உள்ளனர்.
அருண் வைத்தியநாதன் என்பவர் தற்போது அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தையும் கன்னடத்தில் வெளியிடும் திட்டத்தில் பெங்களூருவில் படப்பிடிப்பு நடத்தும்படி சொல்லிவிட்டாராம் அர்ஜுன். இப்படியாக தன்னைத் தேடி வரும் தமிழ்ப்படங்களை எல்லாம் கன்னடத்திலும் தனக்கு கொஞ்சம் மவுசு இருப்பதால் கன்னடப்படமாக மாற்றி வருகிறார் அர்ஜுன்.