அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ஆர்யாவின் 25 ஆவது படமாக வெளிவர உள்ள படம் - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. ராஜேஷ் இயக்கி உள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு இணையான வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடங்கியபோதே உதயநிதியை சந்தித்த ஆர்யா தான் தயாரிக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை நீங்கள் வாங்கி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.
ஆர்யாவின் கோரிக்கையை அப்போதே ஏற்றுக்கொண்ட உதயநிதி, படத்தை முடித்த உடன் சொல்லுங்கள்... வாங்கிக் கொள்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க பட பணிகள் நிறைவடைந்தநிலையில் அடுத்த மாதம் வெளியிடவும் தயாராகிவிட்டனர்.
இந்நிலையில், அண்மையில் உதயநிதியை சந்தித்துள்ளார் ஆர்யா. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க நல்லா வந்திருக்கு. அதனால் அந்தப்படத்தை ஏற்கனவே சொன்னபடி நீங்கள் ரிலீஸ் செய்ய வேண்டாம். நானே சொந்தமாக ரிலீஸ் செய்து கொள்கிறேன். என்று ஆர்யா சொன்னதைக் கேட்டு உதயநிதி லேசாக அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் ஓகே பிரதர் என்று சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகு நடந்ததுதான் ஹைலைட்..! இந்த சந்திப்புக்குப் பிறகு தானே தியேட்டர்களை புக் பண்ண முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்திருக்கிறார் ஆர்யா. பிறகு உதயநிதியை மீண்டும் தொடர்பு கொண்டு நீங்களே தியேட்டர்களை புக் பண்ணிக்கொடுங்கள் அதற்கான சர்வீஸ்சார்ஜை கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னாராம். அதற்கும் சரி என்று சொல்லி இருக்கிறார் உதயநிதி.