ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பட நிறுவனங்கள் தங்களின் படங்கள் குறித்த செய்திகளை பி.ஆர்.ஓ.மூலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் அடிப்படையிலேயே திரைப்படங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. இப்படி அனுப்பி வைக்கப்படும் செய்திகளில் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களும், பல நேரங்களில் பப்ளிசிட்டிக்காக பச்சைப் பொய்களையும் கூட செய்தியாக அனுப்பி வைப்பார்கள். அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே உண்மையான ஊடகங்கள் குறிப்பிட்ட செய்திகளை வெளியிடும். பொய் என தெரிந்தால் அச்செய்தி நிராகரிக்கப்படும்.
திரைப்படம் குறித்து பி.ஆர்.ஓ. அனுப்பும் செய்திகளையே அப்படியே வெளியிடுவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் இன்று வெளியாகும் சகலகலாவல்லவன் படத்தின் விமர்சனத்தை அப்படத்தின் பி.ஆர்.ஓ. மூலம் ஊடகங்களுக்க அனுப்பி வைத்திருக்கின்றனர். அதாவது சகலகலாவல்லவன் படத்தை ஆஹா ஓகோ என பாராட்டி விமர்சனம் என்ற பெயரில் பாராட்டு மடலை அனுப்பி வைத்திருக்கின்றனர். இதை என்ன வென்று சொல்வது? அறியாமையா? அல்லது ஊடகங்கள் குறித்து அலட்சியமா?