தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னணி நடிகர்கள் ஒரே நேரத்தில் ஒரு படம் அல்லது இரண்டு படங்களில் நடிப்பதைத்தான் வழக்கமாகக் கொண்டு வருகிறார்கள். ஆனால் விஜயசேதுபதியோ ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வந்தார். அதனால் இத்தனை படங்களில் ஒரே நேரத்தில் எப்படி நடிக்கிறார் என்கிற கேள்விக்குறிதான் மற்ற நடிகர்களுக்கு எழுந்தது. அதோடு, நில்லாமல் புதிய படங்களில் கமிட்டாவதையும் அவர் நிறுத்தவில்லை. மேலும் சில படங்களிலும் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால் ஏற்கனவே நடித்து வந்த நான்கு படங்களை தற்போது அவர் முழுமையாக முடித்துக் கொடுத்து விட்டாராம். அதில் இன்று வெளியாகும் ஆரஞ்சு மிட்டாய், இதைத் தொடர்ந்து செப்டம்பரில் இடம் பொருள் ஏவல், அக்டோபரில் மெல்லிசை, நவம்பரில் நானும் ரெளடிதான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.