டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் சல்மான்கான், தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள். இவர்கள் யாருடைய வருகையும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவேதான் புலி படத்தின் இசைவெளியீட்டுவிழா அழைப்பிதழில் யாருடைய பெயரும் இடம்பெறவிலை.
இந்நிலையில் புலி இசைவெளியீட்டு விழாவுக்கு தன்னால் வர இயலாது என்று கூறிவிட்டாராம் கமல். தூங்காவனம் பட வேலைகள் இருப்பதை காரணம் காட்டி விழாவுக்கு வர முடியவில்லை என்று சொல்லிவிட்டாராம். கமல் வரவில்லை என்பதால் மகேஷ்பாபு மற்றும் சல்மான்கான் இருவரையும் எப்படியாவது புலி விழாவுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
மகேஷ்பாபுவின் படங்களுக்கு இசையமைத்தவகையில் தேவிஸ்ரீபிரசாத்துக்கு மகேஷ்பாபு நல்ல பழக்கமாம். எனவே மகேஷ்பாபுவை அழைத்து வரும் பொறுப்பை தேவிஸ்ரீபிரசாத்திடம் ஒப்படைத்துள்ளனர். புலி படத்தின் ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சல்மான்கான் படங்களில் பணியாற்றியவர். எனவே நட்ராஜ் மூலம் சல்மான்கானை அழைத்து வர முயற்சி நடக்கிறது.