நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கிப்போட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அப்துல் கலாமின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் அப்துல் கலாமின் படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள் கலாமின் மரணத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கதறியழுத சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படியாக அப்துல் கலாமின் மரணம் எல்லா தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தியநிலையில், திரைப்படத்துறையினரின் செயல் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
அப்துல் கலாமின் மரணச் செய்தி வெளியாக சில மணி நேரத்தில் தனுஷ் தன் பிறந்தநானை விமரிசையாகக் கொண்டாடினார். அந்த பார்ட்டியில் தண்ணிப்பார்ட்டியும் நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, வைரமுத்து, கமல், ரஜினி, சிவகார்த்திகேயன், பிசி ஸ்ரீராம், தாமு, வடிவேலு போன்ற வெகு சிலர் தவிர வேறு யாரும் குறிப்பாக நடிகர் நடிகைகள் இரங்கல் கூட தெரிவிக்க வில்லை. ஒரு சில நட்சத்திரங்கள் மட்டும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர். அதே நேரம் வழக்கம்போல் சந்தோஷமான, கேளிக்கையான, கிண்டலான விஷயங்களை மட்டும் தொடர்ந்த பகிர்ந்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்களின் மனிதாபிமானமற்ற இந்த செயல் மக்கள் மத்தியில் அவர்கள் மீது வெறுப்பை விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை.