ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் ஸ்டைல் மன்னனாக துறுதுறு நாயகன் வேடங்களை ஏற்று நடித்து வந்த அல்லு அர்ஜுன், அதிக கோபம் கொண்டு சீறும் இளைஞனாக தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுன் இக்கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ரசிகர்கள் அறிந்திராத வகையில் கோபமாக தோன்றும் அல்லு அர்ஜுன் கண்டிப்பாக ரசிகர்களைக் கவருவார் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இத்தகவல் வெளிவந்தது முதல் ரசிகர்கள் அல்லு அர்ஜுன் ஏன் இவ்வளவு கோபம் கொள்கின்றார் அதற்காக படத்தில் வைக்கப்படும் காட்சிகள் எப்படி இருக்கும் என இப்பொழுதே தங்கள் யூகங்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நடிகைகள் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் தெரஸா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஜூலை 19 ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.