இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அரண்மனை படத்தை வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய்லட்சுமி, சந்தானம், கோவை சரளா ஆகியோரை வைத்து இயக்கிய சுந்தர்.சி., அப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வசூல் சாதனை புரிந்தது. அதனால் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சித்தார்த்- த்ரிஷாவை வைத்து இயக்குகிறார். அவர்களுடன் ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்பட பலர் நடிக்கின்றனர்.
முந்தைய படம் ஹிட்டானபோதும் அந்த படம் ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரீமேக் போன்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. அதனால் இந்தமுறை எந்த பழைய படங்களின் பாதிப்பும் இல்லாத வகையில் புதுமையான கதையை ரெடி பண்ணியிருக்கிறாராம் சுந்தர்.சி.,
அதோடு, பேய் படம் என்றபோதும் தனது வழக்கமான பாணி காமெடியையும் சரிபாதி கலந்து படமாக்கி வந்த சுந்தர்.சி., சென்னையில் ஒரு பிரமாண்ட அரண்மனை செட் அமைத்து வந்தார். அதில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் தயாராகி வந்தனர். ஆனால் அவர்கள் கால்சீட் கொடுத்த நேரம் பார்த்து தமிழ்த்திரையுலகில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் பல மாதங்களாக வடிவமைக்கப்பட்டு வந்த புதிய அரண்மனை செட் உபயோகப்படுத்தப்படாமல் நின்று கொண்டிருக்கிறது.