ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்தார்த் - ப்ரியாஆனந்த் நடித்த நூற்றென்பது படத்தில் தமிழுக்கு வந்த நித்யாமேனன். அதையடுத்து நானி நடித்த வெப்பம் படத்திலும் நடித்தார். இந்த படங்களில் ஓரளவு நடித்திருந்த நித்யா, அதன்பிறகு கோலிவுட் இயக்குனர்களின் கவனத்தில் நின்றபோதும், அவரது உயரம் மற்றும் அவர் போடும் கண்டிசன்களால் அவரை நெருங்காமல் விலகியே நின்றனர்.
இந்தநிலையில்தான், 22 பீமேல் கோட்டையம் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தில் அதிரடியான ஒரு கதாபாத்திரத்தில் நித்யாமேனனை நடிக்க வைத்தார் ஸ்ரீப்ரியா. அதையடுத்து காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி படங்களில் சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் நித்யா.
ஆனால், அதன்பிறகு அவரை தேடி சென்றதெல்லாமே பட்ஜெட் ஹீரோக்களின் படங்கள்தானாம். மணிரத்னம் படத்தில் நடித்து விட்டதால் மெகா ஹீரோக்களின் படவாய்பபுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நித்யாவுக்கு அது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம். அதனால், நான் எதிர்பார்க்கிற பெரிய ஹீரோக்களின் படங்கள் அல்லது ஹீரோயினியை மையப்படுத்தும் கதைகள் வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். இல்லையேல் அதுவரைக்கும் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு, மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நித்யாமேனன்.