Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தான் பெட்டர்! த்ரிஷா

30 ஜூலை, 2015 - 01:18 IST
எழுத்தின் அளவு:
Living-together-is-better-says-Trisha

கல்யாண விவகாரம், அரசியல் கிசு கிசு என, தன்னைச் சுற்றி, சர்ச்சைகள் ஒரு பக்கம் ரவுண்டு கட்டி அடித்தாலும், 13 ஆண்டுகளாக, திரையுலகில், அழகு கேட் வாக் நடத்தி, ரசிகர்களை வசியம் செய்து வருகிறார் த்ரிஷா. மின்சார புன்னகை, இதயத்தை ஊடுருவும் விழி வீச்சு என, நொடிக்கொரு தரம், எதிரில் இருப்போரை இம்சிக்கும் இந்த அழகு ராட்சசிக்கு, 32 வயதாகி விட்டது என்றால், நம்ப முடியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையை பார்த்தால் எல்லாமே பயமாக உள்ளது. யார், எந்த நேரத்தில், எப்படி நம்பிக்கை துரோகம் செய்வர் என்பதை கணிக்க முடியவில்லை. உண்மையான காதலை கண்டுபிடிப்பது இப்போதெல்லாம் ரொம்ப கஷ்டமான காரியம். அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...


உடம்பை ஸ்லிம்மாக மெயின்டெயின் பண்றீங்களே எப்படி?


திங்கள்கிழமையிலிருந்து, வெள்ளிக் கிழமை வரை, சாப்பாடு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். காய்கறி சூப், சாலட், பழங்கள் ஆகியவை தான் சாப்பிடுவேன். ஆனால், சனி, ஞாயிற்று கிழமைகளில் சுதந்திர பறவை ஆகி விடுவேன். பிரியாணி, வெண்ணெய் கலந்த உணவுகள், ஐஸ்கிரீம் என, என்ன கிடைத்தாலும், பிரித்து மேய்ந்து விடுவேன். அவ்வப்போது, உடற்பயிற்சி செய்கிறேன். யோகா பயிற்சியாளரை வீட்டுக்கு வரவழைத்து, பயிற்சி பெறுகிறேன்.


உங்கள் பிளஸ் மற்றும் மைனஸ்?


நான் ரொம்பவும் தன்னம்பிக்கை மிகுந்த பெண். தேவையில்லாமல் எதற்கும் பயப்பட மாட்டேன். எப்போதுமே,கூல் ஆக இருக்க வேண்டும் என, நினைப்பேன். என் பிடிவாதமான குணம் தான், எனக்கு மைனஸ். நினைத்ததை நடத்தி காண்பிக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெடுவேன்.


உண்மை காதல் எது?


ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்வது தான் உண்மையான காதல். இப்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் எல்லாமே பயமாக உள்ளது. யார், எந்த நேரத்தில், எப்படி நம்பிக்கை துரோகம் செய்வர் என்பதை கணிக்க முடியவில்லை. உண்மையான காதலை கண்டுபிடிப்பது இப்போதெல்லாம் ரொம்ப கஷ்டமான காரியம்.


ரஜினி கூட நடிக்கணும் என, சொல்லிட்டே இருக்கீங்களே?


ஆமாம், ரொம்ப நாளாக சொல்லிட்டு தான் இருக்கேன்; எப்போது எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என, அவர் தான் சொல்ல வேண்டும். அவருடன் இணைந்து நடிப்பதற்காக காத்திருக்கிறேன்.


சமூக வலைதளங்களில் உங்கள் பங்கு அதிகமா இருக்கே?


ரொம்ப நல்ல விஷயம் தானே! நடிக்கும் படங்களின் விளம்பரத்துக்கு மட்டும் சமூக வலைதளங் களை பயன்படுத்தாமல், சமூகம் சார்ந்த விஷயங்களை அதில் பதிவு செய்வது நல்லது தானே; ரொம்ப பயனுள்ளதாகவும் இருக்கிறது.


த்ரிஷாவின் நிஜமான கேரக்டர்?


எதையும் கண்டுக்க மாட்டேன்; எது நடந்தாலும், மவுனம் மட்டுமே என் பதிலாக இருக்கும். சினிமாவுக்கு இது ரொம்ப முக்கியம். நல்லதும் சொல்வாங்க; கெட்டதும் சொல்வாங்க. எதைப் பற்றியும் மண்டைய போட்டு உடைத்துக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது.


திரை அனுபவத்தில் கற்றது?


அமைதியாக இருப்பதை தான் கற்றுக் கொண்டேன். நான் திரையுலகிற்கு வரும்போது, பொறுமையில்லை; எதற்கெடுத்தாலும் கோபம் வரும். இப்போது, கோபத்தை குறைச்சுருக்கேன். நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். சினிமாவில் கடினமான உழைப்பை கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும். இப்படிப்பட்ட விஷயங்கள் கூட, என்னை அமைதிப்படுத்தியதற்கு காரணமாக இருந்துள்ளது.


எந்த மாதிரி ரோலில் நடிக்க ஆசை?


வரலாற்று படங்களில் இதுவரை நடித்தது இல்லை; அந்த மாதிரியான ரோலில் நடிக்க ஆசை. பாகுபலி பார்த்த பின், இப்படி ஒரு ஆசை வந்து விட்டது.


எந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்க ஆசை?


அஞ்சலி, ஓவியா, பூனம் பஜ்வா போன்ற நடிகையருடன் சேர்ந்து நடிக்கிறேன். எமி ஜாக்சன், காஜல் அகர்வால் போன்றவர்களுடன், வாரத்துக்கு இரு முறையாவது பேசிவிடுவேன். மற்றபடி, எனக்கு மிகவும் நெருக்கம் நயன்தாரா தான். நானும், நயனும் தோழிகள் என்பதால்,


நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுறேன்.


திருமணம் பற்றி திரும்ப யோசிப்பீங்களா?


காலம், நேரம் எல்லாம் சொல்ல முடியாது; ஆனால், எனக்கு பொருத்தமான ஒருவரை


சந்தித்தால் உடனே திருமணம் செய்துகொள்வேன். காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லையே!


திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வது பற்றி?


கல்யாணம், விவாகரத்து போன்ற விஷயங்களை விட, கல்யாணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வது பெட்டர் என, நினைக்கிறேன். இரண்டு பேர் குடும்பமும் சேர்ந்து முடிவு எடுத்து, அவர்கள் விருப்பப்படி வாழ்வது, அவர்கள் சுயமாக எடுக்கும் முடிவு.


திருமணத்துக்கு முன்பே காதல் பிரிவு ஏற்படுவது குறித்து...?


அது, நல்ல விஷயம் தானே... கல்யாணம் முடிந்து, குழந்தை பெற்று, அதன்பின், இரண்டு பேருக்குமே பிடிக்காத, வெறுப்பான வாழ்க்கையை வாழ்வதை விட, திருமணத்துக்கு முன்பே பிரிந்து விடுவது நல்லது தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in