விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. பிரம்மா இயக்கி உள்ள இந்தப் படத்தை சிருஷ்டி சிலுவப்பன் தயாரித்திருந்தார். அதனை ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சதீஷ்குமார் வாங்கி வெளியிடுகிறார். படம் ஆகஸ்டில் வெளிவருகிறது. ராதிகா, பிரசித்தா, மாஸ்டர் அஜய் நடித்துள்ளனர்.
ஒரு ஆசிரியைக்கும் பள்ளி மாணவனுக்கு இடையிலான கதை. அதீத திறமை வாய்ந்த தன் மாணவனை ஆசிரியை புத்திசாலித்தனமாக கையாள்கிறார். ஒரு முறை அவர் லீவில் சென்று விட அடுத்து வரும் ஆசிரியர் அந்த மாணவனை தவறாக கையாள ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. அந்த மாணவின் அதீத திறமையே அந்த பிரச்னைக்கு காரணம் என்று எல்லோருக்கும் புரிய வைத்து ஆசிரியை மாணவனை காப்பாற்றுகிற கதை.
தற்போது இதனை தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். தமிழில் இயக்கிய பிரம்மாவே இந்தியிலும் இயக்குகிறார். ஆசிரியை கேரக்டரில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார்.