‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கோலிவுட் மார்க்கெட்டில் வளர்ந்து கொண்டிருந்த லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா, ஆனந்தி, மனீஷா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு எதிர்பார்த்தபடி வளர்ச்சி இல்லை. ஆனால், ரஜினி முருகன் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், வந்த வேகத்திலேயே நான்கைந்து படங்களை கைப்பற்றி மேற்படி நடிகைகளுக்கு பலத்த போட்டி நடிகையாகியிருக்கிறார். தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். இப்படி முதல்படம் திரைக்கு வருவதற்கு முன்பே கீர்த்தி சுரேஷ்க்கு மளமளவென்று படங்கள் புக்காகி வருவதற்கு முக்கிய காரணம், அவருக்கு தமிழ் மொழி தெரியும் என்பதோடு, அவரது சின்சியாரிட்டியும் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, டைரக்டர்கள் ஒரு காட்சியை சொன்னதும், அதில் இன்னும் என்னென்ன விசயங்களை சேர்த்து நடிக்கலாம் என்று தனது சார்பிலும் யோசிக்கும் கீர்த்தி சுரேஷ், டைரக்டர்களே எதிர்பார்க்காத வகையில் நடித்துக்கொடுக்கிறாராம். அவரது தாய்குலம் மேனகாவும் அவருக்கு நல்லதொரு நடிப்பு ஆலோசகராக இருக்கிறாராம். இந்த சேதி கோலிவுட்டில் பரவியதை அடுத்து, புதிதாக படம் இயக்கவிருக்கும் டைரக்டர்களின் கவனமும் கீர்த்தி சுரேஷ் பக்கம் திரும்பியிருக்கிறது.