ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1989ல் ராஜநடை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாம்லி. அதையடுத்து மணிரத்னத்தின் அஞ்சலி படம் அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும் பெற்றுக்கொடுத்தது. அதையடுத்து மலூட்டி என்ற மலையாள படத்தில் நடித்து கேரளா அரசு விருதினை பெற்றார். இப்படியாக தென்னிந்திய மொழிப்படங்களில் சுமார் 35 படங்களில் நடித்திருக்கிறார் பேபி ஷாம்லி. ஆனா அவர் குமரி ஆனபிறகு, தெலுங்கில் ஒய் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர், அதைத்தொடர்ந்து அக்காள் ஷாலினி விட்டுச்சென்ற காலி இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார் ஷாம்லி.
படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியவருக்கு பல படவாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அடுத்து தான் நடிக்கப்போகும் படம் பிரமாண்டமாகவும், முன்னணி நடிகரின் படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்த ஷாம்லி, இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான சதீப் நடிக்கும் படத்தில் கமிட்டாகி விட்டார். பெங்களூருக்கு சென்று ரவிக்குமார் லொகேசன்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அந்த படத்துக்காக தனது உடல் எடையை சற்று குறைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் ஷாம்லி. அதோடு சினிமாவில் தான் விட்டுச்சென்ற இடத்தை தங்கையை வைத்து நிரப்பி விட வேண்டும் என்று நினைக்கும் அவரது அக்காள் ஷாலினியும் தற்போது ஷாம்லிக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறாராம்.