இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 15ந் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. வேலை நாளில் தேர்தல் நடத்துவதாகவும், உறுப்பினர்கள் சேர்ப்பில் முறைகேடு இருப்பதாகவும் கூறி விஷால் அணியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சங்க விதிகளின்படியே தேர்தல் நடத்தப்படுவதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கில் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்.
இந்த தடையை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று விஷால் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சங்கங்களின் பதிவாளர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்பநாபன் நியமிக்கப்படுகிறார். அவர் தேர்தல் தேதியை அறிவித்து தேர்தலை நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுவார். தேர்தல் நடத்த தேவையான ஆவணங்களை பொதுச்செயலாளரிடமிருந்து அவர் பெற்றுக் கொள்ளலாம். இதன் மேல் விசாரணை அக்டோபர் 2ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.