தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'அட்டகத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து 'பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது பா.ரஞ்சித் இயக்க, ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கும், இறைவி, காஷ்மோரா ஆகிய படங்களுக்கும் இசையமைக்கப் போகிறார்.
கடந்த சில நாட்களகா சந்தோஷ் நாராயணன் சினிமாவில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் ஏற்கெனவே வெற்றிகரமான நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் சந்தோஷ் நாராயணனும் நடிகராகப் போகிறார் என்றார்கள். ஆனால், தான் சினிமாவில் நடிப்பதாக வந்த செய்தியை மறுத்துள்ளார் சந்தோஷ்.
இது குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “வதந்திகள் அனைத்தும் தவறானவை. கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்திற்காக ஒரு இசைக் குழுவினராக நடித்தோம். என் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.