பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாக்களை பொறுத்தவரை வெளியாகும் பாதிப்படங்களில் பாடல்களே இருக்காது. இன்னும் சில படங்களில் போனால் போகிறதென்று ஒன்றோ இரண்டோ இருக்கும். அதிலும் டூயட்டுக்கு வேலையே இருக்காது. ஆனால் இன்றைய தலைமுறை இயக்குனர்களில் சிலர், குறிப்பாக தமிழ்சினிமா கலாச்சாரத்தை மலையாளத்தில் புகுத்த விரும்பும் ஒரு சிலர் தான் பாடல்களிலும் கவனம் செலுத்துகின்றனர். 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தின் இயக்குனர் நாதிர்ஷா அந்த கூட்டத்தில் ஒருவர் தான்.
பிருத்விராஜ் - இந்திரஜித் - ஜெயசூர்யா மூவரையும் வைத்து தான் இயக்கியுள்ள 'அமர் அக்பர் ஆண்டனி' படத்திற்கு 'காதல் என்றால் என்ன பெண்ணே.?” என்கிற அர்த்தம் வரும்படியாக கலக்கலான ஒரு பாடலை அவரே எழுதியுள்ளார்.. இந்த பாடலுக்கு நடனம் அமைக்க நம்ம ஊர் தினேஷ் மாஸ்டரை தேடிவந்தவர், இந்த பாடலை பாடவைக்க பாடகர்கள் யாரையும் தேடவில்லை. மூன்று கதாநாயகர்களையும் அழைத்து அவர்களையே பாடவைத்துவிட்டார். இந்த மூவரும் இதுவரை தனித்தனியாக பாடியிருந்தாலும் இணைந்து பாடுவது இதுதான் முதல்முறை.