தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாக்களை பொறுத்தவரை வெளியாகும் பாதிப்படங்களில் பாடல்களே இருக்காது. இன்னும் சில படங்களில் போனால் போகிறதென்று ஒன்றோ இரண்டோ இருக்கும். அதிலும் டூயட்டுக்கு வேலையே இருக்காது. ஆனால் இன்றைய தலைமுறை இயக்குனர்களில் சிலர், குறிப்பாக தமிழ்சினிமா கலாச்சாரத்தை மலையாளத்தில் புகுத்த விரும்பும் ஒரு சிலர் தான் பாடல்களிலும் கவனம் செலுத்துகின்றனர். 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தின் இயக்குனர் நாதிர்ஷா அந்த கூட்டத்தில் ஒருவர் தான்.
பிருத்விராஜ் - இந்திரஜித் - ஜெயசூர்யா மூவரையும் வைத்து தான் இயக்கியுள்ள 'அமர் அக்பர் ஆண்டனி' படத்திற்கு 'காதல் என்றால் என்ன பெண்ணே.?” என்கிற அர்த்தம் வரும்படியாக கலக்கலான ஒரு பாடலை அவரே எழுதியுள்ளார்.. இந்த பாடலுக்கு நடனம் அமைக்க நம்ம ஊர் தினேஷ் மாஸ்டரை தேடிவந்தவர், இந்த பாடலை பாடவைக்க பாடகர்கள் யாரையும் தேடவில்லை. மூன்று கதாநாயகர்களையும் அழைத்து அவர்களையே பாடவைத்துவிட்டார். இந்த மூவரும் இதுவரை தனித்தனியாக பாடியிருந்தாலும் இணைந்து பாடுவது இதுதான் முதல்முறை.