'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாக்களை பொறுத்தவரை வெளியாகும் பாதிப்படங்களில் பாடல்களே இருக்காது. இன்னும் சில படங்களில் போனால் போகிறதென்று ஒன்றோ இரண்டோ இருக்கும். அதிலும் டூயட்டுக்கு வேலையே இருக்காது. ஆனால் இன்றைய தலைமுறை இயக்குனர்களில் சிலர், குறிப்பாக தமிழ்சினிமா கலாச்சாரத்தை மலையாளத்தில் புகுத்த விரும்பும் ஒரு சிலர் தான் பாடல்களிலும் கவனம் செலுத்துகின்றனர். 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தின் இயக்குனர் நாதிர்ஷா அந்த கூட்டத்தில் ஒருவர் தான்.
பிருத்விராஜ் - இந்திரஜித் - ஜெயசூர்யா மூவரையும் வைத்து தான் இயக்கியுள்ள 'அமர் அக்பர் ஆண்டனி' படத்திற்கு 'காதல் என்றால் என்ன பெண்ணே.?” என்கிற அர்த்தம் வரும்படியாக கலக்கலான ஒரு பாடலை அவரே எழுதியுள்ளார்.. இந்த பாடலுக்கு நடனம் அமைக்க நம்ம ஊர் தினேஷ் மாஸ்டரை தேடிவந்தவர், இந்த பாடலை பாடவைக்க பாடகர்கள் யாரையும் தேடவில்லை. மூன்று கதாநாயகர்களையும் அழைத்து அவர்களையே பாடவைத்துவிட்டார். இந்த மூவரும் இதுவரை தனித்தனியாக பாடியிருந்தாலும் இணைந்து பாடுவது இதுதான் முதல்முறை.