மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'பாகுபலி' படம் இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் சாதனையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, தென்னிந்தியத் திரையுலகச் சாதனைளை முறியடித்து 400 கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை இந்தப் படம் தாண்டிவிட்டது. தெலுங்கில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை விரைவில் அள்ள உள்ளது. சென்னையில் 'ஐ' படத்திற்குப் பிறகு அதிக வசூலைப் பெற்றுள்ள படமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. ஒரு பக்கம் 'பாகுபலி' படம் பற்றிய வசூல் சாதனைகள் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் 'கட்டப்பா' ஏன் 'பாகுபலி'யைக் கொன்றார் என்ற ஒரே ஒரு விஷயம்தான் தற்போது அதிகம் பேசப்படுகிறது.
'பாகுபலி - தி பிகினிங்' முடிவில் அமரேந்திர பாகுபலியை நான்தான் கொலை செய்தேன் என 'கட்டப்பா' சொல்வது போல படத்தை முடித்திருந்தார்கள். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்கான விடை 'பாகுபலி - தி கன்குளூஷன்' இரண்டாம் பாகத்தில்தான் தெரிய வரும். ஆனால், அதுவரை பொறுமை இல்லாத சமூக வலைத்தளவாதிகள் புதிது புதிதாக பல மீமீக்களை உருவாக்கி வருகிறார்கள். பல திரைப்படங்களின் புகைப்படங்களை வைத்து அவற்றை 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்பதற்குப் பொருத்தமாக டிசைன் செய்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட மீமீக்கள் அதிகமாகி வருகின்றன. 'கட்டப்பா' கதாபாத்திரம்தான் 'பாகுபலி' கதாபாத்திரத்திற்குப் பிறகு அதிகம் பேசப்படும் கதாபாத்திரமாக மாறியுள்ளது.
'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்பதைத் தெரிந்து கொள்ள 2016ம் ஆண்டு வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை எந்த ரூபத்திலும் அந்த உண்மை மட்டும் வெளியில் வந்துவிடாது, வர விட்டுவிடுவாரா ராஜமௌலி?