600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
'பிரேமம்' படம் வெளியாகி 55 நாட்களாகிவிட்டது. பிளாக் பஸ்டர் ஹிட்டும் வேறு ஆகிவிட்டது. வசூல் மழையில் நனைந்துகொண்டே இருக்கிறது.. ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியான விவகாரம் மட்டும் ஒரு கண் திருஷ்டி மாதிரி தான். ஆனால் என்னடா இன்னும் படத்தின் மீது யாரும் தனிப்பட்ட முறையில் சேற்றை வாரி இறைக்கவில்லையே என நினைத்தால் இதோ அந்த வேலையை பிரபல மலையாள இயக்குனர் கமல் முதல் ஆளாக செய்துவிட்டார். தமிழில் பிரசாந்த்-ஷாலினி நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை இயக்கினாரே அதே கமல் தான்.
சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல் அங்கே 'பிரேமம்' படம் பற்றிய பேச்சை எடுத்தார். “அந்தப்படத்தில் கல்லூரி மாணவன் ஒருவன் தனக்கு பாடம் சொல்லித்தரும் பேராசிரியை மீது காதல் கொள்வதாகவும், அந்த ஆசிரியையும் அவனை விரும்புவதாகவும் காட்டியிருப்பது இன்றைய இளைஞர்களுக்கு தவறான வழி காட்டியது போலாகும். தவிர மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்பறைக்கு வரும் காட்சிகளும் மாணவர்களை தூண்டிவிடுவது போலத்தான் இருக்கிறது” என தனது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.. அதுமட்டுமல்ல, 'பிரேமம்' பட ஆன்லைன் லீக் விவகாரத்தையும் கூட, அது என்ன புதிதாகவா நடக்கிறது என்கிற ரீதியில் தான் இயக்குனர் கமல் கருத்து சொல்லியுள்ளாராம்..