டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நட்சத்திரங்கள், அது நடிகரோ அல்லது நடிகையோ சினிமாவில் நடிப்பதையும் தாண்டி சமூகத்திற்கு உதவும் விதத்தில் தங்களது பங்களிப்பு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி உட்பட சில முன்னணி நடிகர்களும், காவ்யா மாதவன், மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகளும் ஏதாவது ஒரு சமூக அமைப்பில் உறுப்பினர்களாகத்தான் இருக்கின்றனர். முக்கியமான நேரங்களில் அந்த அமைப்பின் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவற்றின் திட்டங்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர்.
இப்போது பொதுமக்களின் உயிர்காக்கும் முக்கிய சேவையான ஆம்புலன்ஸ் (102) சேவையை கொச்சின் மாவட்ட எல்லை வரை ஒருமுகப்படுத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஏஞ்சல்ஸ் (Active Network Group of Emergency Life Savers) என்கிற அமைப்பு தான் அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டப்படி நகரிலோ, கிராமத்திலோ எங்கு வசித்தாலும் போன் செய்தால், மூன்று நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அவர்களது இருப்பிடத்துக்கு வந்துவிடுமாம்.
இந்த திட்டத்தின் தொலைபேசி சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் நல்லெண்ண தூதராக பொறுப்பேற்க இருக்கிறார் நடிகர் ஜெயசூர்யா. இதில் தூதராவது குறித்து பேஸ்புக்கில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயசூர்யா. இந்த திட்டம் வரும் ஞாயிறு அன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமயில் துவக்கி வைக்கப்பட இருக்கிறது.