அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ராம் இயக்குனராக அறிமுகமான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை என்றாலும் அஞ்சலியின் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து 'அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு' ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டு தமிழில் ஒரு முக்கிய இடத்தை நோக்கி வேகமாகவே முன்னேறிக் கொண்டிருந்தார். அதற்குள் சித்தியுடன் தகராறு, இயக்குனர் களஞ்சியத்துடன் பிரச்சனை என ஆரம்பமாக தமிழ்நாட்டை விட்டு விலகி ஐதராபாத்திற்குப் போய் விட்டார். அதன் பின் அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களிடம் கேட்டால் கூட அஞ்சலியைப் பற்றித் தெரியாது என்றே சொன்னார்கள்.
எப்டியோ 'சகலகலா வல்லவன்' படத்தின் மூலம் இயக்குனர் சுராஜ் அஞ்சலியை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் அஞ்சலிதான் நடிக்க வேண்டும் என்று படத்தின் நாயகன் ஜெயம் ரவிதான் சிபாரிசு செய்துள்ளார். இதை அவரே நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் தெரிவித்தார். டிரைலரையும், பாடல்களையும் பார்த்தவர்களுக்கு த்ரிஷாதான் மிகவும் ஸ்லிம்மாகத் தெரிந்தார். அஞ்சலியோ கொஞ்சம் குண்டாகி ஓ..இவர்தான் அஞ்சலியா என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு இருந்தார். விரைவில் உடல் இளைத்தால் மட்டுமே அஞ்சலியின் அடுத்த இன்னிங்ஸ் தமிழில் வெற்றிகரமாக ஆரம்பமாகும். இல்லையென்றால் இடையிலேயே காணாமல் போகவேண்டியிருக்கும், அது அஞ்சலிக்கும் தெரிந்திருக்கும்.