தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு தமிழில் முன்னணி நடிகராக சூர்யா உயரக் காரணமாக இருப்பவர்களில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருவர். 'காக்க காக்க' படம் மூலம் சூர்யாவை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திக் காட்டினார். அடுத்து 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் அவருக்கு இன்னொரு பரிமாணத்தையும் கொடுத்தார். மூன்றாவது முறையாக அவர்கள் இணைவதாக அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்ட 'துருவ நட்சத்திரம்' படம் மேற்கொண்டு வளராமல் போய்விட்டது. அதோடு, அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்ற ஒரு அறிக்கையையும் சூர்யா கொடுக்கும் அளவிற்கு அவருக்கும் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் பின் அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார்களா என்பது தெரியாது.
ஆனால், இன்று காலை நடைபெற்ற 'நைட் ஷோ' படத்தின் டிரைலர் வெளியீட்டில் இருவரும் ஒரே மேடையில் நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எடிட்டராக இருக்கும் ஆண்டனி முதன் முறையாக இயக்கியுள்ள 'நைட் ஷோ' படத்தின் டிரைலரை சூர்யா வெளியிட இயக்குனர்கள் கௌதம் மேனன், கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேடையில் கௌதம் மேனன் உள்ளிட்ட இயக்குனர்கள் முன்னதாகவே அழைக்கப்பட்டு விட பின்னர் மேடைக்கு அழைக்கப்பட்ட சூர்யா, மரியாதை நிமித்தமாக கௌதம் மேனனிடம் கைகுலுக்கு விட்டு வேறு பக்கம் சென்று நின்று விட்டார். கௌதம் மேனன் பக்கத்தில் நிற்க இடமிருந்தாலும் கவனத்துடனே அதைத் தவிர்த்திருப்பார் என்றே தோன்றுகிறது. அதன் பின் மேடையை விட்டு இறங்கும் வரை அவருடன் பேசவேயில்லை. இருவரது பிரச்சனைக்குப் பிறகு இருவரும் ஒரே பொது மேடையில் தோன்றுவதே இதுவே முதல் முறையாக இருக்கலாம். மீடியாக்களுக்கு முன்பாக இருவரும் கொஞ்சமாவது பேசியிருக்கலாம். ஆனாலும், அவர்களது ஈகோ அவர்களைப் பேச விடாமல் தடுத்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.