இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெயம்ரவி நடிக்கும் சகலகலா வல்லவன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் குறிப்பிட்ட சில நிருபர்களுக்கு மட்டும் த்ரிஷாவும், அஞ்சலியும் பேட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது த்ரிஷாவின் பேட்டி முதலில் தொடங்கியது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட நிருபர்கள் த்ரிஷாவிடம் கேள்விகளைக் கேட்க, அவருக்கும் சளைக்காமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார். சுமார் இருபது நிமிடங்கள் த்ரிஷாவின் பேட்டி நீடித்துக்கொண்டே போக, அருகில் அமர்ந்திருந்த அஞ்சலியின் முகம் வாடிப்போனது. தன்னை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்று கடுப்பாகிவிட்டார் போலிருக்கிறது.
விருட்டென எழுந்து வெளியே போய்விட்டார். த்ரிஷாவின் பேட்டி முடிந்த பிறகு அஞ்சலியைத் தேடினால் ஆளைக் காணோம். த்ரிஷாவின் பேட்டி முடிந்ததும் தன்னை அழைப்பார்கள் என்பதை தெரிந்து கொண்ட அஞ்சலி, வேண்டும் என்றே செல்போனை காதில் வைத்துக் கொண்டு நகர்ந்துபோய்விட்டார். அவரை அழைக்கச் சென்ற படக்குழுவினரை கண்டும் காணாததுபோல் திரும்பி நின்று கொண்டார். கடைசியில் நிகழ்ச்சி தொடங்கும் நேரம் நெருங்கிவிடவே, நேராக மேடைக்கு சென்றுவிட்டார்.
யப்பா.. இந்த நடிகைகளுக்கு உள்ள பொறாமை இருக்கே...!