'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஞ்சலி பற்றி அரசல் புரசலாக சொல்லப்பட்ட விஷயம்தான். அதை மேடையிலேயே போட்டு உடைத்துவிட்டார் சகலகலாவல்லவன் படத்தின் இயக்குநரான சுராஜ்.
பார்ப்பதற்கு சாதுபோல் இருக்கும் அஞ்சலி, நிஜத்தில் பயங்கர கோபக்காரி என்று படத்துறையில் உள்ளவர்கள் சொல்வார்கள். அவர் எந்தளவுக்கு கோபக்காரி என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொன்னார் சுராஜ். சகலகலாவல்லவன் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, மாலை பேக்கப் சொன்ன பிறகு அனைவரும் அவரவர் ரூமுக்குப்போய்விட்ட பிறகும் அஞ்சலி மட்டும் போக மாட்டாராம். கிரிக்கெட் விளையாடுவது உட்பட பல விளையாட்டுகள் விளையாடுவது அல்லது கேளிக்கை என டைம்பாஸ் செய்வாராம். அதனால் மறுநாள் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவாராம். இதனால் படப்பிடிப்பு தாமதமானதை அடுத்து அஞ்சலியை சீக்கிரம் போய் தூங்கச்சொல்லி இருக்கிறார் சூரி. அவரது அட்வைஸ் அஞ்சலியை டென்ஷனாக்கிவிட்டதாம். உடனே சூரியின் செல்போனைப் பிடுங்கி கீழேபோட்டு உடைத்திருக்கிறார்.