அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் வெங்கடேஷுடன் மீண்டும் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் கரந்தி மாதவ் இயக்கும் படத்தில் வெங்கடேஷ் நாயகனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. துளசி, கிருஷ்ணம் வண்டே ஜகத்குரும், லக்ஷ்மி போன்ற படங்களில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடித்த நயன்தாரா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் பர்சுரி பிரசாத் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்திற்கான பூஜை ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் நடைபெறும் என தெரிகிறது. தமிழில் மாயா எனும் திகில் படத்தில் நடித்துவரும் நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள தனியொருவன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.