நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
உலக மலையாளிகள் கவுன்சில் சென்னையில் 2006ம் ஆண்டுமுதல் மெட்ராஸ் மெடிக்கல் மிஷனுடன் இணைந்து ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து வருகிறது. இதுரை 164 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மலையாள இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டி இந்தப் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த இருதய அறுவை சிகிச்சை திட்டத்துக்கு கமல்ஹாசன் தூதராக உள்ளார்.
இந்த ஆண்டு ஹிருதயராகம் என்ற தலைப்பில் மலையாள இசை அமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரனின் இசை நிகழ்ச்சி சென்னை புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் மலையாள பின்னணி பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாடினார்கள். பின்னர் கமல்ஹாசன் இந்த ஆண்டு இலவச இருதய அறுவை சிகிக்சை செய்வற்காக உலக மலையாளிகள் கவுன்சில் சார்பில் 25 லட்சம் ரூபாயை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் அமைப்பிடம் வழங்கினார்.
பின்னர் அவர் மலையாளத்தில் பேசிதாவது: எனக்கும், மலையாளிகளுக்குமான பந்தம் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. என் சினிமா வாழ்வின் ஆரம்ப காலங்களில் மலையாளிகள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அன்று முதல் இன்று வரை அவர்கள் என்னோடு இருக்கிறார்கள். நான் அவர்களோடு இருக்கிறேன். அந்த நன்றி கடனுக்காக இந்த மேடையில் நான் நிற்கிறேன்.
பாபநாசம் படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று இங்கே சொன்னார்கள். ரீமேக் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படுவதில்லை. அப்படி வழங்குவதென்றால் என் சகோதரன் மோகன்லாலுக்கு வழங்க வேண்டும். உலக மலையாளிகள் கவுன்சிலின் இந்த உன்னத பணி தொடர எனது வாழ்த்துக்கள். என்றார்.