டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அதன்பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டையக்கிளப்பனும் பாண்டியா ஆகிய படங்களில் நடித்து ஓரளவு வளர்ந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இடம்பொருள் ஏவல் படத்தில் புக்காகி சில நாட்கள் நடித்து வந்தபோது அப்பட டைரக்டர் சீனுராமசாமி மீது சில தவறான தகவல்களை சொல்லிக்கொண்டு அந்த படத்தில் இருந்தே வெளியேறினார் மனீஷா. விளைவு, அதன்பிறகு அவரை புக் பண்ண இருந்தவர்கள் பிரச்சினைக்குரிய நடிகையாக இருப்பார் போலிருக்கே என்று பின்வாங்கினர்.
இருப்பினும், கோலிவுட்டை விட்டு வெளியேறாமல் தீவிர படவேட்டையில் ஈடுபட்டிருந்த மனீஷா யாதவ், இப்போது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் ஜி.வி.பிரகாசுடன் நடித்துள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இன்னொரு நாயகியாக கயல் ஆனந்தியும் நடித்துள்ளார். என்றபோதும், மனீஷா யாதவுக்கு அழுத்தமான கதாபாத்திரமாம்.
அதனால் இந்த படத்திற்கு பிறகு தனது கேரியரில் திருப்பம் ஏற்படும் என்று கூறும் அவர், இனிமேல் கவர்ச்சி விசயத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லையாம். தங்குதடையின்றி தாராளம் காட்ட தயாராகி விட்டதாகவும் உரக்கச் சொல்கிறார்.