ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை விஜய் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் நடித்து வெளிவரும் படங்களுக்கு மிகப் பெரிய ஓபனிங் இருக்கும். முதல் வாரத்திலேயே மிகப் பெரிய கலெக்ஷனையும் அள்ளிக் கொடுப்பது வழக்கம். சமீப காலமாக தமிழ்நாட்டில் வினியோகஸ்தர்களின் செல்லப் பிள்ளையாக விஜய் இருந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் பூஜை போட்ட நாளன்றே வினியோகஸ்தர்களால் வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. 'புலி' படத்தின் அனைத்து ஏரியாக்களும் எப்போதோ விற்பனையாகிவிட்டது.
விஜய்க்கு மற்ற எந்த தமிழ் நடிகர்களைக் காட்டிலும் கேரளாவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அவருடைய படங்கள் நேரடி மலையாளப் படம் அளவிற்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும். கர்நாடகாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ஆனால், இதுவரை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமே விஜய் அழுத்தமாகத் தடம் பதிக்காமல் இருந்தார். அந்தக் குறையை 'ஜில்லா' படம் போக்கிவிட்டது. கடந்த வெள்ளியன்று வெளியான 'ஜில்லா' படம் இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியும், படத்தின் இயக்குனர் நேசனும் மீடியாக்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்கள்.
தெலுங்கு நடிகர்கள் தமிழில் நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க முயற்சித்து வரும் நிலையில் தமிழ் நடிகர்கள் டப்பிங் படங்களின் மூலமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஜில்லா' வெற்றி மூலம் விஜய் தென்னிந்திய அளவில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.