'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. தற்போது தமிழில், ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் (அப்பாடக்கர்) படத்திலும், கமலுடன் தூங்காவனம் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அப்பாடக்கர் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷாவிடம், வருண்மணியன் உடனான திருமணம் உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது முடிந்த போன விஷயம், அதைப்பற்றி இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. காதல் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. என் வாழ்விலும் வந்தது போனது. நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே நான் திருமணம் செய்து கொள்வேன். தற்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் தான்.
இவ்வாறு த்ரிஷா கூறினார்.