பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தலைப்பை பார்த்தவுடன், நயன்தாரா ஏதோ காரைக்குடி பகுதிவாழ் ஒருவரின் மருமகளாக ஆகப்போகிறார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
தமிழ்த்திரையுலகில், "ஆச்சி" என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை மனோரமா. குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு கேரக்டர்களில் மனோரமா நடித்திருக்கும்போதிலும், அவரின் நகைச்சுவை நடிப்பே, மக்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
அதேபோல, தானும் மனோரமா மற்றும் கோவை சரளா போன்று காமெடி கேரக்டர்களில் கலக்க வேண்டும் என்பதே, நயன்தாராவின் கனவாக உள்ளது.
ஹரியின் இயக்கத்திலான ஐயா படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. தன் அறிமுக நடிப்பிலேயே, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். குறுகிய காலத்திலேயே, ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடித்தார். இதன்மூலம், கோலிவுட்டில் முன்னணி நடிகையானார்.
பின் நயன்தாரா, படங்களில் நடித்த செய்தியை விட, அவரது அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகளே, ஊடகங்களில் அதிகம் வெளிவந்தன. இருந்தபோதிலும், நயன்தாரா, திரையுலகில் முன்னணி நடிகையாகவே திகழ்ந்துவந்தார்.
படங்களில் ஹீரோயின்கள், ரொமான்ஸ் காட்சிகளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா அந்த வழக்கத்தை உடைத்து குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து வந்தார். இதனிடையே, மனோரமா, கோவை சரளா போன்று காமெடி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று நயன்தாரா கூறியுள்ளார்.
காமெடி பட டைரக்டர்களே....நோட் பண்ணுங்கப்பா!!!!