வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) திடீரென கடுமையான ஊதிய உயர்வை தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நாளை (ஜூலை 27) முதல் படப்பிடிப்புகளை ரத்து செய்து அறிவித்தது. திடீர் ஊதிய உயர்வுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் வரை ஸ்டிரைக் நடக்கும் என்று அறிவித்தது.
படப்பிடிப்புகள் ஒரு பக்கம் நிறுத்தப்பட்டாலும். பெப்சி நிர்வாகிகளுடனான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தயாரிப்பாளர் சங்கம் நாளை (ஜூலை 27) தொடங்குகிறது. இதில் இதுவரை ஊதிய உயர்வில் முடிவு எட்டப்படாத சங்க நிர்வாகிகளும், பெப்சி தலைவர் ஜி.சிவாவும், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
"பெப்சியுடன் பேச்சு வார்த்தை நடந்தாலும் அறிவிக்கப்பட்ட படப்பிடிப்புகள் ரத்து நடைமுறையில் இருக்கும். சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் தொடர்ந்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும். ஊதிய ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு முன்பே பெப்சி ஊதிய உயர்வை அறிவித்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விஷயத்தில் எங்களுக்கு இயக்குனர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் ஒத்துழைப்பு தந்து வருகிறது" என்கிறார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா.