ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்தவித மறுப்போ, தயக்கமோ இல்லாமல் கதை சொல்வதற்கு முன்னரே வித்யாபாலன் ஒத்துக்கொண்டதை இயக்குனர் ஆர்.சரத்தால் நம்பவே முடியவில்லை. அதற்கான காரணத்தையும் வித்யாபாலனே சொன்னார்.. அதற்குமுன் விஷயம் என்னவென்று சொல்லிவிடுகிறோம். மலையாளத்தில் தயாராகியுள்ள புத்தனும் சாப்ளினும் சிரிக்குன்னு என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் மலையாள காமெடி நடிகர் இந்திரன்ஸ்.. படத்தில் சாப்ளினின் தீவிர ரசிகராக இந்திரகுப்தன் என்கிற பெயரில் நடித்திருக்கும் இவர் சார்லி சாப்ளினை போலவே தனது நடை உடை பாவனைகளை மாற்றி கடைசியில் சாப்ளினாகவே ஆகிவிடுவாராம்.
இப்போது வித்யாபாலன் விஷயத்துக்கு வருவோம்.. இந்தப்படத்தை இந்தியிலும் ரீமேக் பண்ணவிருக்கும் ஆர்.சரத், இதில் சாப்ளினாக நடிக்க அணுகியது ஒரு ஆண் நடிகரை அல்ல, பாலிவுட்டின் கனவுக்கன்னியான வித்யாபாலனைத்தான். எழுந்து வெளியே செல்லுங்கள் என சொல்வார் என எதிர்பார்த்த சரத்துக்கு, நான் நடிக்கிறேன் என்று வித்யாபாலன் சொன்னதும் தன்னையே நம்பமுடியவில்லையாம்.
வித்யாபாலன் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் அவர் சாப்ளினின் தீவிர ரசிகர். அடுத்ததாக தான் நடிக்கும் கேரக்டர்கள் ஏதாவது ஒருவகையில் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும் என நினைப்பவர். மூன்றாவதாக இந்த மலையாள படத்தின் பிரிமியர் ஷோவை சுவிட்சர்லாந்தில் உள்ள சார்லி சாப்ளின் மியூசியத்தில் திரையிட்டுள்ளார்கள். இந்த சிறப்பு காட்சியில் சார்லி சாப்ளினின் பேத்தியான லாரா சாப்ளின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதை கேள்விப்பட்டதும் இந்தப்படத்தின் மீது வித்யாபாலனுக்கு மரியாதையே வந்துவிட்டதாம்.
ஆக சாப்ளின் அவதாரத்தில் வித்யாபாலன்.. அடடே..!