டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா மட்டுமே. மற்ற நடிகைகளை விட அதிகமான படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, தன்னை வளர்த்துவிட்ட தெலுங்குப் படங்களை இப்போதைக்கு சுத்தமாக மறந்தே விட்டார். சென்னைப் பெண்ணாக இருந்து கொண்டு தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றால் எப்படி, அதனால்தான் தற்போது கிடைத்து வரும் வாய்ப்புகளை சமந்தா மிஸ் பண்ணாமல் கைப்பற்றி விடுகிறார்.
'பத்து எண்ணுறதுக்குள்ளே, விஐபி 2, 24, பிரம்மோற்சவம், விஜய் 59, வட சென்னை' ஆகிய படங்களின் நாயகியாக அத்தனை முன்னணி தமிழ் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார் சமந்தா. இன்னும் பல புதுப்பட வாய்ப்புகள் சமந்தாவைத் தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அதற்கெல்லாம் எப்படி தேதிகளை ஒதுக்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். மேலும், தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.
விஜய்யுடன் அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஜோடியாக நடித்து வரும் படம் பற்றி நேற்று டிவீட் ஒன்று செய்துள்ளார். “விஜய்யுடன் நடிக்கும் புதிய படத்தின் ஷெட்யூல் ஒன்றை முடித்துவிட்டேன். என்னுடைய படங்கள் வெளிவரும் நாட்களைக எண்ணிக் கொண்டு, பொறுமையிழந்து உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் அடுத்த வெளியீடாக 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படம்தான் வர வேண்டும். ஆனால், படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் 'விஐபி 2' வெளிவந்து விடும் வாய்ப்புதான் அதிகம் என்கிறார்கள்.