'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சரித்திரப் படங்கள் என்றாலே அதில் வீரமும் இருக்கும், காதலும் இருக்கும். அந்தக் காலத்தில் வெளிவந்த சரித்திரப் படங்களில் இவையிரண்டுமே சரி விகிதத்தில் கலந்து இருக்கும். பல ராஜ்ஜியங்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்ததே பெண்கள்தான் என்று சொல்வார்கள். மண்ணாசையும், பெண்ணாசையும்தான் பல மன்னர்கள் வீழ்வதற்கும் காரணமாக இருந்தது. ஆண்களே பெரும்பாலும் அரசாட்சி புரிந்த அந்தக் காலங்களில் ஒரு சில பெண்களும் அரசியாட்சி புரிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீர மங்கைதான் 'ருத்ரமாதேவி'.
அந்த 'ருத்ரமாதேவி'யின் வாழ்க்கை வரலாற்றை ஏன் படமாக்கினேன் என படத்தின் இயக்குனர் குணசேகர் சொல்லியிருக்கிறார். “பள்ளிக் காலத்தில் 'ருத்ரமாதேவி' பற்றி பாடப் புத்தகங்களில் படித்த போதே என்னை மிகவும் ஈர்த்தது. நான் இயக்குனரான பின்பு அந்தக் கதையை எவ்வளவு செலவானாலும் படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் நிறைவைத் தொட்டுள்ளோம். சரியான நேரத்தில் சொன்னபடி படம் வெளிவந்துவிடும். தெலுங்கைத் தவிர, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட உள்ளோம். இடைவெளிக்குப் பிறகு ஹிந்தியில் வெளியிட உள்ளோம்.
மொத்த படமும் 3டி-யில் படமாக்கப்பட்ட படம் என்பதால் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இந்தப் பட உருவாக்கத்தில் பல வரலாற்று ஆய்வாளர்களும், திரையுலகின் அனுபவசாலிகளும் உதவியாக இருந்தார்கள். இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருப்பதற்கு அனுஷ்காவின் ஆதரவு மிகவும் முக்கியமாக இருந்தது. இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்று முடிவு செய்த உடனேயே, பலரும் அனுஷ்காதான் ருத்ரமாதேவி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்றார்கள். இந்தப் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் படமாக இருக்கும்,” என குணசேகர் தெரிவித்துள்ளார்.