மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நான் ஈ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி தெலுங்குப் படம் இந்திய சினிமாவையே புரட்டிப்போட்டுவிட்டது. இந்திய சினிமாத்துறையில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் 'ஹாட் டாபிக்' பாகுபலி படமும், அதன் பிரம்மாண்ட வசூலும்தான்! கடந்த 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான இப்படம் வெளியான 3 நாட்களிலேயே 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 15 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. இதை மிகப்பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. பாகுபலி படம் வெளியாகி 15 நாட்களான நிலையிலும் இப்படம் வெளியான தியேட்டர்களில் இன்னமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'பாகுபலி'யின் இந்த பிரம்மாண்ட வெற்றி தென்னிந்திய சினிமா உலகினரை மட்டுமல்லாமல் மொத்த இந்திய சினிமா உலகினரையே பேசவும், வியக்கவும் வைத்துள்ளது! அது மட்டுமல்ல, இனி 150 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.