தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
தமிழில் சிறகு என்ற படத்தில் நடித்தவர் நடிகை ஷில்பா. சில மலையாள படங்களிலும் மலையாள சீரியல்களிலும், சந்தன மழை என்ற தமிழ் சீரியலிலும் நடித்து வந்தார். 19 வயதான ஷில்பா தன் பெற்றோருடன் திருவனந்தபுரம் அருகில் உள்ள சொந்த ஊரான பாலராமாபுரத்தில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டுச் சென்ற ஷில்பா அங்குள்ள ஆற்றில் பிணமாக மிதந்தார். இதையொட்டி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷில்பா உள்ளூரைச் சேர்ந்த விஜின் என்ற போட்டோகிராபரை காதலித்து வந்ததும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. காதலன் விஜின் தலைமறைவானதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் தனிப்படை அமைத்து காதலன் விஜினை தேடி வந்தனர். காட்டாக்கடை என்ற ஊரில் நண்பர்கள் உதவியால் தலைமறைவாக இருந்த விஜினை போலீசார் கைது செய்தனர். அவரை தாம்பானூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஷில்பாவை விஜின் தற்கொலைக்கு தூண்டினாரா? அல்லது அவரே கொலை செய்து ஆற்றில் வீசினாரா? அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.