வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகத்திலும் ஹீரோயின்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. எப்போதோ ஒரு முறைதான் ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரும். ஆனால், மலையாளத் திரையுலகத்தில் ஹீரோயின்களுக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். முன்பெல்லாம் விஜயசாந்தி நடித்த படங்கள் ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களுக்கு சவால் விடும் படங்களாக அமைந்து தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்றன. அதன் பின் அவருடைய இடத்தை நிரப்பும் அளவிற்கு வேறு யாரும் இதுவரை வரவில்லை.
இப்போதுதான் அனுஷ்காவிற்கு ஓரளவிற்கு அப்படி சில வாய்ப்புகள் வந்துள்ளன. 'பாகுபலி' படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்காவின் நடிப்பு, ஏமாற்றத்தை அளித்தாலும், இரண்டாம் பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்கள். அடுத்து அனுஷ்கா நடித்து வெளிவர உள்ள 'ருத்ரமாதேவி' படத்தில், அனுஷ்காவைச் சுற்றியேதான் கதையே நகர உள்ளது. இந்தப் படத்தில் அனுஷ்கா பல சாகசங்களை செய்துள்ளாராம். அதோடு தான் நடித்து வரும் மற்றொரு படமான 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் கதாபாத்திரத்திற்காக தன் அழகிய தோற்றத்தைக் கூட குண்டாக மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா.
'ஹீரோயின்களுக்கும் இது மாதிரியான கதாபாத்திரங்களைக் கொடுக்கவும் இயக்குனர்கள் முன் வர வேண்டும். எங்களைப் போன்ற ஹீரோயின்களும் ஆக்ஷன் படங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயாராக உள்ளோம். எங்களைப் பற்றியும் யோசித்தால் நன்றாக இருக்கும்,” என அனுஷ்கா கேட்டுக் கொண்டுள்ளாராம்.