வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தன்னை விட ஒருவன் முன்னேறிக் கொண்டு போகிறான் என்றால் அவனைக் கண்டு பெருமைப்படாமல், பொறாமைப்படுபவர்களே இந்த உலகத்தில் அதிகம். அடுத்தவர்களைப் பாராட்டும் குணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த விஷயம் தற்போது 'பாகுபலி' படத்திற்கும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஒரு புதிய சாதனையை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் 'பாகுபலி' படத்தை இயக்கிய ராஜமௌலியை தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த மற்ற முன்னணி இயக்குனர்கள் இதுவரை மனம் திறந்து பாராட்டவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
தமிழில் முன்னணி இயக்குனராக விளங்கும் ஷங்கர், மற்றும் ஹிந்தியில் முன்னணி இயக்குனர்களாக உள்ள பலரும் ராஜமௌலியைப் பாராட்டி வருகிறார்கள். ஆனால், தெலுங்கில் முக்கிய இயக்குனர்களாகக் கருதப்படும் த்ரிவிக்ரம், பூரி ஜெகன்னாத், சீனு வைட்லா, விநாயக் உள்ளிட்ட யாரும் இதுவரை 'பாகுபலி' படத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ராம் கோபால் வர்மா மட்டுமே டிவீட் செய்திருந்தார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் படத்தைப் பற்றி பாராட்டியுள்ள நிலையில் மற்ற முன்னணி இயக்குனர்கள் ராஜமௌலியைப் பாராட்டாமல் இருப்பது அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் பொறாமையைக் காட்டுவதாக உள்ளது என தெலுங்கு மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.