'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எஸ்.எஸ்.வி.எஸ். எஸ்.எஸ்.கே புரொடக்சன்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனம் தயாரித்துள்ள படம் எப் பி- சேட்டஸ் போடு சாட் பண்ணு. பேஸ்புக்கை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இந்த படத்தின் ஹீரோ- வில்லன் எல்லாமே பேஸ்புக் தானாம்.
இப்படத்தை சிவி என்ற படத்தை இயக்கிய செந்தில் நாடன் இயக்கியிருக்கிறார். சுரேஷ்சர்மா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மாஜி ஹீரோ ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர்களுடன் அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், ஷாம்ஸ், பாண்டு உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து இயக்குனர் செந்தில் நாடன் கூறுகையில், இது ரெகுலர் படமில்லை. அதோடு ஹேப்பியான எண்டிங்காக இருக்காது. பேஸ்புக்கில் ராங்காக கைடு ஆகி அதிலிருந்து தப்பிப்பது பற்றியான கதை.
இதில், 3 ஹீரோயினிகள் என்றாலும் யாரும் ஹீரோயினியாக தெரியாது. ஒவ்வொரு கேரக்டராக வருவார்கள். ஷாட் பண்ணுவார்கள். மற்றபடி கமர்சியல் நோக்கத்தில் மூன்று ஹீரோயினிகளை படத்தில் வைக்கவில்லை. பேஸ்புக் மூலமாக ஒரு பிரச்சினையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூரிலும் வெளியாகிறது என்றார்.
அவரைத் தொடர்ந்து படத்தின் நாயகன் சுரேஷ்சர்மா பேசும்போது, இந்த படத்தில் நடிக்க இயக்குனர் கதை சொன்னபோது என்னால் இந்த பாத்திரத்தை சரியாக செய்ய முடியுமா என்று தயங்கினேன். ஆனால் அவர் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். மற்றபடி நான் உங்களை மோல்டு செய்து கொள்கிறேன் என்றார். அப்படி நடிக்கத் தொடங்கியபோது, 2 நாள் பயமாக இருந்தது அதன்பிறகு தைரியமாக நடித்து விட்டேன்.