பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அதிகவேகமாக வளர்ந்துவரும் விஞ்ஞானத்தினால் எந்தமாதிரியான கலாச்சார சீர்கேடுகள், எந்தமாதிரியான மனிதனின் மனநிலை மாறிக்கொண்டு வருகிறது என்பதை, மனிதனை பைத்தியமாக்கும் 1/16 வினாடிகள் என்ற படத்தின் கதையாக உருவாக்கியிருப்பதாக சொல்கிறார் இயக்குனர் மித்ரன் சாணக்யா.
அப்படம் குறித்து அவர் மேலும் கூறுகையில், நவீன விஞ்ஞானம் ஏகப்பட்ட குப்பைகளை நம்முடைய மைண்டில் கொண்டு வந்து கொட்டுகிறது. இதனால் நம்முடைய மூளையே கிளர்ச்சி அடைந்து விடுகிறது. இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நவீன விஞ்ஞான வளர்ச்சியினால் எந்தவொரு செயலையும் மனிதனால் செயல்படுத்த முடியவில்லை. செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவான், அடுத்து பேஸ்புக்கை ஓப்பன் செய்வான். டிவியை போடுவான். ஆனால் ஒரு சேனலையும் பார்க்க மாட்டான். ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டேயிருப்பான். தூங்கும்போதுகூட டிவி ஆன் செய்து வைத்து விட்டுத்தான் தூங்குவான். டிவியை ஆப் பண்ணினால் விழித்து விடுவான். இப்படித்தான் நவீன விஞ்ஞானம் மனிதனை எந்த செயலையும் ஒழுங்காக செயல்படுத்த விடாமல் நிலைதடுமாற வைத்துள்ளது.
இப்படி பெரியவர் முதல் சிறியவர் வரை குழம்பிக்கொண்டேயிருக்கிறோம். இதுபோன்ற பிரச்சினைகளால் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கு டிரக்ஸ் கொடுக்கப்படுவதாககூட சொல்கிறார்கள். எதிர்காலத்தில் நம்ம நாட்டில்கூட இந்த நிலை வரலாம். அதைப்பற்றியான ஒரு திரைவடிவம்தான் நம்மை பைத்தியமாக்கும் 1/16 வினாடிகள் படத்தின் கதை.
இன்னும் சொல்லப்போனால், எதையும் முடிவு செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டேயிருப்பார்கள். என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் ஒருவரின் மனம் எங்கோ போய்க்கொண்டிருக்கும். ஆனால் அவர் என்னிடம் பேசிக்கொண்டேயிருப்பார். பின்னர் திடீரென்று என்ன சொன்னீங்க? என்று கேட்பார். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில்தான் இந்த படத்தின் நாயகன் லோகேஸ்வரன் நடிக்கிறார். அவர் புதுமுகம் என்றாலும்கூட கதையின் நாயகனாக அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முக்கியமாக, டூயட், காமெடி, காதல் என்ற வழக்கமான சினிமா இல்லை இந்த படம். இலக்கிய மரபுகளை தொட்டு எடுக்கப்பட்டிருக்கும் படமாகும்.
மேலும், மீடியா மக்களுக்கானதுதான். ஆனால் மக்களுக்கானதாக இல்லை. டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக, ஒன்றுமில்லாத செய்திகளை, உண்மைக்கு புறம்பான செய்திகளை கண்டபடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இந்த படத்தின் ஹீரோவும் சேனலில் வேலையும் நபர்தான். ஆனால் அவருக்கு இது பிடிக்காது. மக்களுக்கான மீடியாவை மக்களுக்கானதாக மட்டுமே நடத்த வேண்டும். பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை திரித்து வெளியிடக்கூடாது என்று தான் வேலை செய்து வரும் சேனலில் இருந்து விலகி அவர் தனி சேனலை தொடங்க வருவான். அப்போது அவனுடன் வேலை செய்த ஒரு பெண்ணும் இவனது சேனலில் வேலைக்கு சேருகிறாள்.
ஆனால் ஹீரோ பாசிட்டிவாக யோசிக்க, அவன் கூட வந்த பெண்ணோ பயங்கர நெகட்டிவாக யோசிக்கிறாள். நியூஸ் வாசிக்கும்போதே ரத்த வாசனை அடிக்க வேண்டும். விஐபிக்களின் செக்ஸ் பிரச்சினை என்று எதையாவது பரபரப்பாக சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் அப்போதுதான் ஆடியன்ஸ் பார்ப்பார்கள் என்று சொல்வாள். வள்ளலார் மாதிரி நடத்திக்கொண்டிருந்தால் சேனலை இழுத்துமூடி விட்டு வீட்டுக்குப்போக வேண்டியதான் என்று சொல்வாள்.
ஆனால் ஹீரோ கேரக்டரோ அதற்கு உடன்படமாட்டான். நல்லவிதமான செய்திகளை மட்டுமே வெளியிடவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பான்.
மேலும் இப்படி தவறான முறையில் மீடியாக்கள் இருப்பதினால்தான். மக்களின் மனநிலையும் மாறி வருகிறது. குறிப்பாக, விபத்தினை நேரில் பார்த்து பயந்த குழந்தைகள் இப்போது சூப்பர் ஆக்சிடென்ட் இன்னைக்கு பார்த்தேன் என்று சந்தோசமாக சொல்லும்நிலை ஏற்பட்டிருக்கிறது.