ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது சரத்குமார் அணி-விஷால் அணி என இரண்டுபட்டு நிற்கிறது. இதற்கு முன்பு இதேமாதிரி இருதரப்பினர் தேர்தலை சந்தித்தபோதெல்லாம் இதுபோன்று இரு அணியினரும் ஜென்ம விரோதிகள் போன்று நடந்து கொண்டதில்லை. ஆனால் இந்த முறைதான் அரசியலுக்கு இணையாக நடிகர் சங்கம் ஒரு அனல் பறக்கும் தேர்தலை சந்திக்கப்போகிறது.
குறிப்பாக, நாடக நடிகர்களை ஒரு பொருட்டாகவே நினைத்து பார்த்திராதவர்கள் இப்போது அவர்களிடம் ஓட்டு இருப்பதால், தேர்தல் நேரத்தில் கூவம் ஆற்றோரங்களிலும் இறங்கி அரசியல் தலைவர்கள் ஓட்டுக் கேட்பதை போன்று மதுரை, திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை என குக்கிராமங்களில் வாழும் நாடன நடிகர்களைத் தேடிச்சென்று இரண்டு அணியினரும் மாறி மாறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
மேலும், விஷாலைப்பொறுத்தவரை, தான் வாக்கு சேகரிக்க செல்லும் நாடக நடிகர்களிடம் வாக்கு வேண்டும் என்பதை வெளிப்படையாக கேட்காமல், நடிகர் சங்கத்தில் நடந்துள்ள ஊழலை அம்பலப்படுத்த எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் என்றுதான் கேட்கிறாராம். ஆனால் இதற்கு சில ஏரியாக்களில் ஆதரவு கிடைத்தாலும், சில ஏரியாக்களில் அவர் உள்ளே செல்வதற்கே அனுமதி கிடைப்பதில்லையாம். இருப்பினும், அங்கு முகாமிட்டு அவர்களை சமாதானப்படுத்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறாராம் விஷால்.