மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜி.வி.பிரகாஷின் முத்த மழையில் நனைந்து, பரபரப்பு செய்தியில் இடம் பிடித்தவர், கன்னடத்து பைங்கிளி மணிஷா யாதவ். வழக்கு எண் படத்தில், பள்ளி மாணவியாக நடித்த மனிஷாவா இது என, ஆச்சரியப்பட வைக்கிறது, அவரின் தோற்றம். முத்த விவகாரத்தை தவிர, வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்ற நிபந்தனையுடன்பேசத் துவங்கினார் மனிஷா...
வழக்கு எண் படத்தில் அறிமுகமானபோது, தொடர்ந்து பல படங்களில் வருவீர்கள் என நினைத்தால், ஏமாற்றி விட்டீர்களே?
எனக்கு, படங்களின் எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லை. ரொம்ப ரொம்ப செலக்டிவான கதைகளில் தான் நடிக்கிறேன்; எனக்கு வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்வது இல்லை. சினிமா என் பேஷன். எனக்கு வசதியாக, சிரமம் இல்லாத படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
படிப்பு முடிந்ததா?
ஒரு வருஷம் முன்னாடியே பி.காம்., முடிச்சிட்டேன், கையில் இப்போ ஒரு டிகிரி இருக்கு. பேஷன் டிசைன் மேல விருப்பம் உண்டு. அப்பப்ப ஏதாவது டிரஸ் டிசைன் பண்ணுவேன்.
திரிஷா இல்லனா நயன்தாராவில் உங்கள் ரோல்?
அதிதி என்ற கேரக்டர் என்னுடையது. இது ஒரு ஜாலியான கதை; ஹீரோவின் இரண்டு காதலிகளில் ஒருவராக நான் நடிக்கிறேன். என் கேரக்டர், இளைஞர்களிடம் அதிகம் பேசப்படும்.
இந்த படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளதாக...?
ஆமாம், ஒரு குத்துப்பாட்டுக்கு ரொம்ப வேகமா ஆடியிருக்கேன்; ஆண்ட்ரியா பாடிய, டகால்ட்டி என்ற பாட்டு அது. நான் அதிகமாக டான்ஸ் ஆடியது, இந்த பாட்டுக்காகத் தான்.
கிளாமராக நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறீர்களே?
அப்படி சொல்ல முடியாது; எந்த கேரக்டர் எனக்கு பொருத்தமாக உள்ளதோ, அந்த கேரக்டரில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். நான், சினிமா குடும்பத்தை சேர்ந்த பெண் இல்லை; எனக்கு சினிமா புதுசு. பார்த்து, பார்த்து தான் நடிப்பேன்; கிளாமர் அவசியமா என, யோசிப்பேன். கதைக்கு தேவை என்னவோ, அந்த அளவை மீற மாட்டேன்.
பெரிய ஹீரோக்களுடன் எப்போது ஜோடி சேரப் போகிறீர்கள்?
ஆசை இருக்கு; ஆனால், அதற்கேற்ற கதை கிடைக்க வேண்டுமே. நேரம், காலம், அதிர்ஷ்டம் எல்லாம் கைகூடி வந்தால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கலாம்.
நீங்க இன்னும் கவனம் செலுத்த நினைப்பது?
நடிகையருக்கு ஆக் ஷன் வாய்ப்பு கிடைப்பதே ரொம்ப அரிதான விஷயம். ஒரு குப்பைக் கதை படத்தில் ஆக் ஷன் காட்சிகள் உள்ளன. அதில் நடிக்கும்போது, செமத்தியாக அடி வாங்கினேன்; அப்போது தான், ஹீரோக்கள் படும் கஷ்டம் எனக்கு தெரிந்தது. சினிமாவில், எல்லாத்தையும் கற்றுக் கொள்வது அவசியம்னு நினைக்கிறேன்.
எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை?
பாலா, சசி, ஷங்கர் இப்படி நிறைய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை. இவர்களை போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது, நிறைய கற்றுக் கொள்வதுடன், நம்மகிட்ட இருக்கும் திறமையை சரியா பயன்படுத்துவாங்கன்னு நம்புறேன்.
தமிழ் ரசிகர்கள் பற்றி?
தமிழ் ரசிகர்கள் திறமைசாலிகள்; யாராக இருந்தாலும், ரொம்ப ஆதரவு கொடுப்பாங்க. சமூக வலைதளங்களை, கடந்த 20 நாட்களாகத் தான் பயன்படுத்துறேன். எல்லாருமே ஆதரவு தர்றாங்க; இது, சந்தோஷமான விஷயம்.
நீங்க ரொம்ப தைரியமான பெண்ணா?
ஷூட்டிங் வரும்போது, அம்மாவுடன் தான் வருவேன்; அம்மாவுக்கு வேலை இருந்தால், நான் மட்டும் தனியா வருவேன். ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்குவேன்; எல்லாத்துக்கும் பயப்படுவேன். இப்ப எனக்கு, 23 வயசு ஆகுது; ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கு. அம்மாவிடமிருந்து தைரியம் கிடைச்சிருக்கு; நிறைய கத்துக்கிட்டேன்.
புதுமுகங்கள் ஏன் தமிழ் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடிவதில்லை?
எல்லாருக்கும், டாப் லெவல் போகணும், நம்பர் ஒன் இடத்துக்கு போகணும் என, ஆசைப்படுகின்றனர்; ரசிகர்கள் மனசில் எப்படியாவது இடம் பிடிக்க நினைக்கின்றனர். த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா இவங்களுக்கு எல்லாம் ஒரு அங்கீகாரம் இருக்கு. சில படங்களில் நடித்து, அதில் ஏதாவது ஒரு படம் ஹிட் ஆனால் தான், பிரபலமாக முடியும். புதுமுகங்களுக்கு சினிமா கொஞ்சம் கஷ்டம் தான்.