ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஜயகாந்தின் நண்பரும், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவருமான இப்ராஹிம் ராவுத்தர் காலமானார். அவருக்கு வயது 63. கடந்த சில ஆண்டுகளாகவே இப்ராஹிம் ராவுத்தர் இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார், உடல் எடையில் பாதிக்கு மேல் இழந்தார். கடந்த சில வாரங்களாக வட பழனியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
மதுரையில் பிறந்த இப்ராஹிம் ராவுத்தர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர். இவருடன் இவரது பால்ய நண்பரான விஜயராஜ் எனும் விஜயகாந்த்தும் சென்னை வந்தார். விஜயகாந்தின் பல படங்களை இவர் தான் தயாரித்தார். ஐவி கிரியேசன்ஸ், ராவுத்தர் பிலிம்ஸ், மற்றும் கேப்டன் சினி கிரியேசன்ஸ் போன்ற பேனர்களில் உழவன் மகன், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை தயாரித்தார். இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் அப்படியே எழுந்து தன் பட விழாவுக்கு வந்தார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர்
ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாது தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் சில ஆண்டுகளாக இருந்துள்ளார். யார் கஷ்டம் என்று வந்தாலும் உடன் சென்று உதவும் நல்ல மனம் படைத்தவர் இப்ராஹிம் ராவுத்தர்.
விஜயகாந்தின் வளர்ச்சியில் இப்ராஹிம்
விஜயகாந்தின் வெற்றிக்கு அவரது திறமை உட்பட பல காரணங்கள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான காரணம்... அவரது நண்பரான இப்ராகிம் ராவுத்தர்தான். சினிமா ஆசையில் விஜயராஜ், மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தபோது அவருடன் வந்தவர்தான் இப்ராகிம் ராவுத்தர். தன் பால்ய நண்பனான விஜயராஜ்காக எத்தனையோ போராட்டங்களை சந்தித்தவர். எத்தனையோ தியாகங்களை செய்தவர். விஜய்ராஜ் பிற்காலத்தில் விஜயகாந்த் ஆகி முன்னணி ஹீரோவாக உயர்ந்தபோது அவருக்கு நண்பராக மட்டுமின்றி, நல்ல ஆலோசராக, மானேஜராக இருந்து விஜயகாந்தை வழி நடத்தியவர் இந்த இப்ராகிம் ராவுத்தர்தான் என்று சொன்னால் மிகையாது.
பிரிந்த நட்பு
நகமும், சதையும் போல அவ்வளவு நட்பாக இருந்த விஜயகாந்த்தும், இப்ராஹிம் ராவுத்தரும் ஒருகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்தனர்.
கண்ணீர் விட்ட விஜயகாந்த்
தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலம் குன்றி ஆபாய நிலையில் இருக்கும் சேதி அறிந்த விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து நலம் விசாரித்ததுடன் அவரது நிலையை பார்த்து கண்ணீரும் விட்டார்.
அரசியலில் இப்ராஹிம் ராவுத்தர்
இப்ராஹிம் ராவுத்தரும் அரசியலில் இருந்துள்ளார். ஆரம்பத்தில் த.மா.கா.வில் இருந்த இப்ராஹிம், மூப்பனார் மறைவுக்கு பின்னர் அரசியலில் ஒதுங்கியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக., கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
திருமணம் செய்து கொள்ளாதவர்
இப்ராஹிம் ராவுத்தர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்வளவு நாட்களாக அவரின் சகோதரர்கள், சகோதரிகள் உடன் இருந்து கவனித்து வந்தனர்.
உடல் அஞ்சலிக்காக வைப்பு
இப்ராஹிம் ராவுத்தரின் உடல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.