'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ அருகில் 36 கிரவுண்ட் நிலத்தை அரசு நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்தது. ஆனால் இதுவரை அங்கு மணிமண்டம் கட்டுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசு ஒதுக்கிய இடத்தில் சிவாஜி மணிமண்டபம் கட்டக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று சிவாஜி சமூக நலப் பேரவையினர் உண்ணாவிரதம் இருந்தனர். பேரவையின் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், தா.மா.க துணை தலைவர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பீமாராவ் பேசும்போது "சிவாஜிக்கு மணிமண்டம் கட்ட சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர போராடுவேன்" என்றார்.
நடிகர் சங்க உறுப்பினர் பூச்சி முருகன் பேசும்போது "வருகிற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெறும், அப்போது முதல் வேலையாக அவர், சிவாஜிக்கு மணி மண்டம் கட்டுவார்" என்றார். உண்ணாவிரதத்தில் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.