துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். வருகிற 24ந் தேதி வெளிவருவதாக உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் எம்.எஸ்.கே.பிலிம் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் நிர்வாகி பி.நாகராஜ் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமத்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பபட்டது. அதற்கு 21 லட்சம் ரூபாய் பேசப்பட்டு முன்பணமாக 7 லட்சம் கொடுத்துள்ளோம். மீதமுள்ள தொகை பட ரிலீசுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
தற்போது படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் எங்களுக்கு வெளிநாட்டு உரிமத்தை இதுவரை தரவில்லை. இது தொடர்பாக அவர்களை தொடர்பு கொண்டபோதும் சரியான பதில் இல்லை. எங்களிடம் முன் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டு உரிமம் தராமல் உள்ளனர். எனவே படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணையை வருகிற வியாழக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாலு போலீசும் நல்லா இருந்து ஊரும் படம் வருகிற 24ந் தேதி வெளிவருவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.