மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிறகு என்ற தமிழ் படத்தில் நடித்த மலையாள நடிகை ஷில்பா. சில மலையாளப் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அவரும் புகைப்பட கலைஞர் விஜின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஷில்பா திருவனந்தபுரம் அருகில் உள்ள சொந்த ஊரான வெள்ளநாட்டில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷில்பா சொந்த ஊரில் உள்ள ஆற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷில்பாவுக்கும், காதலன் விஜினுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 18ந் தேதி ஷில்பா, விஜின் மற்றும் இன்னொரு பெண்ணுடன் வெளியில் சென்றுள்ளார். மூவரும் தனியாக சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவர்ளிடையே மோதல் வெடித்துள்ளது. ஷில்பாவை விஜின் அடித்துள்ளார். இதனை ஷில்பா தனது தோழியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ஷில்பா ஆற்றில் பிணமாக மிதந்துள்ளார். அவர் காதலனுடன் கோபித்துக் கொண்டு தற்கோலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக ஷில்பாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.