தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்கா படத்தை அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரோபோ படத்தில் அதாவது எந்திரன் படத்தின் பார்ட் -2வில் ரஜினி நடிக்க இருப்பதாக திரையுலகில் நீண்ட நாட்களாகவே செய்தி அடிபடுகிறது. இப்படத்தை லைகா மொபைல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த யூகப்பட்டியலில் இன்னொரு படத்தின் பெயரும் அடிபட்டது. ஏற்கனவே ரஜினி நடித்து மாபெரும் வெற்றியடைந்த பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் ரஜினி சம்மதித்துள்ளார் என்ற தகவல் வெளியானது. சில வாரங்களுக்குப் பிறகு அதற்கு நேர்மாறான தகவலும் வெளியானது.
அதாவது, பாட்ஷா 2 என பெயரிடப்பட்ட கதையை சுரேஷ்கிருஷ்ணா ரஜினியிடம் சொன்னதாகவும் கதையைக் கேட்ட ரஜினி, 'பாட்ஷா படத்தில் இருந்த சப்ஜெக்ட்டும் ஸ்கிரிப்ட்டும் அதன் 2 ஆம் பாகத்தில் இல்லை என்று கருத்துச் சொன்னதோடு அப்படத்தில் நடிக்கவும் மறுத்து விட்டாராம். அதனால் ஏமாற்றம் அடைந்த சுரேஷ்கிருஷ்ணா அஜீத்தை அணுகி கதை சொன்னதாகவும் அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே பாட்ஷா 2-ம் பாகத்தில் அஜீத் நடிப்பார் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இதை மறுத்துள்ளார். பாட்ஷா-2-வில் அஜித் நடிப்பதாக வௌிவந்த செய்தி வெறும் வதந்தி தான் என்றும், அஜித் நடித்தால் கண்டிப்பாக நான் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார்.