ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
இந்திய திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த பாகுபலி படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டதைப் போல் அப்படத்தின் வசூலும் பிரமிக்க வைப்பதைப் போலவே இருந்தது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்ச்சத்திரங்கள் நடித்திருந்தனர். இரண்டரை வருடங்களாக உருவான இப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தில் சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பேசப்படும் விதத்தில் அமைந்தது. முதலில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் ராஜமௌலி கேட்டுள்ளார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெறும் என்பதால் சமந்தா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். பின்னர் நடிகை ஸ்ரீதேவியை அணுகிய ராஜமௌலி அவர் கூறிய சம்பளம் மிக அதிகமாக இருந்ததால் இறுதியாக ரம்யா கிருஷ்ணனை சந்தித்து படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினாராம்.